Thursday, April 7, 2011

வாஸ்து மீன்

வாஸ்து மீன் வளர்த்தால் நல்லதா?

கிடைக்கும் புண்ணியங்கள்.
1. வாஸ்து மீன்களை பாதுகாத்ததும் பராமரித்ததும்  உணவளித்ததும் முதலியன புண்ணிய காரியங்களே. வாஸ்து மீன்
2. நீங்கள் மீன் வாங்கியதன் மூலம் மீன்காரர் லாபம் சம்பாதிக்கிறார். அதை தவிர மீன் தொட்டி வியாபாரியும் லாபம் சம்பாதிக்கிறார் அப்புறம் மீன் உணவு பொருள் வியாபாரியும் லாபம் சம்பாதிக்கிறார். இப்படி பலரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பலரும் லாபம் சம்பாதிக்க நீங்கள் ஒரு காரணமாக இருக்கிறீர்கள். இதுவும் ஒரு புண்ணிய காரியமே. இதனால் உங்களுக்கு இந்த புண்ணிய பலன்களின் மூலம் சில ஆதாயங்கள் வரும் காலத்தில் வரும். வாஸ்து மீன்
அழகிய கலர் மீன்களை நம்ம வீட்டு வரவேற்பறையில் வைத்திருந்தால் பார்க்க ரெம்பவும் அழகாக இருக்கும். நம்ம ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லதா இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். தொட்டியில் ஆடிக்கொண்டிருக்கும் மீனை பார்க்கையில் நம் மனம் மாறுகிறது. மன அழுத்தம் குறைகிறது. இரத்த கொதிப்பு குறைகிறது. வாஸ்துமீன் வகைகளில் ஃப்ளவர்ஹார்ன், அரவனான்னு இருக்கு. ஆனா இதுக்குள்ள நிறைய விதங்கள்ல மீன்கள் கிடைக்கும். வாஸ்து மீன்

பாவகாரியங்கள்: மீனை சுதந்திரமாக செயல்படாமல் வைத்திருத்தல் ஒரு பாவ காரியமே. அதுக்கு பிடித்தமானவைகளை அது இஷ்டபடி சாப்பிட விடாமல் நாம் போடும் உணவுப் பொருட்களையே சாப்பிட வைக்கிறோம். இதுவும் ஒரு பாவ காரியமே. இதனால் வரும் பிறவிகளில் இப்படி_மீன் வளர்ப்பவர்கள் ஜெயில் தண்டனை போன்ற சுதந்திரமற்ற நிலையை அனுபவிக்க நேரிடும். வாஸ்து மீன்

படிக்கும் அறைக்குள் முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி ஆகியவற்றை வைக்க கூடாது. அப்படி வைத்தால் கவனம் திசை திரும்ப வாய்ப்புண்டு அப்புறம் இந்த படிக்கும் அறைக்குள் சூரிய வெளிச்சம் நேராக வந்து விழக்கூடாது. ஆனாலும் அந்த அறையில் வெளிச்சம் இருக்க வேண்டும். இப்படி அமைத்தால், நாம் படிக்கும் விஷயம் நன்கு மனதில் பதியும். வாஸ்து மீன்